இன்னிக்கு வரைக்கும் முடிவு காணப்ப்டாத உயிர்க்கொல்லி நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாள் இன்று
அனுசரிக்கபடுகிறது. மொத்தமா நான்கு கோடி பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா இதில் பெரும்பான்மை பங்கு வகிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை
என்றுதான் புள்ளிவிவர கண்க்குகள் கூறுகின்றன.
உலக தொண்டு அமைப்புகள் பலவும் இந்தியாவில் எய்ட்ஸின் வளர்ச்சியை குறைக்க பாடுபடுகின்றன். இந்திய அரசாங்கம் புள்ளி இராஜாவுக்கு எய்ட்ஸ்
வருமா என்று கேட்டது மட்டும் தான் எனக்கு தெரியும். இதுவரை உருப்படியாக எதாவது திட்டம் தீட்டி நிறைவேற்றி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
இதுவரை இல்லாவிட்டாலும் பரவாயில்லை இனிமேலாவது அரசாங்கம் பாலியல் கல்வியை அறிமுகபடுத்துவது போன்றவற்றை நிறைவேற்றினால் பராவாயில்லை.
அன்புமணி இராமதசு அவர்கள் இப்பொழுது சுகாதார துறை அமைச்சராக இருக்கார். உருப்படியாக எதாவது உருப்படியாக செய்ய நினைத்தால் எய்ட்ஸ் நோயை பற்றி
அடுத்த தலைமுறை கவலைபடாமல் இருக்க நல்ல திட்டம் தீட்டி அதை நிறைவேற்றாலாம்.
அரசாங்கத்தை விடுவோம், நம்மை போன்ற தனிநபர்ளும் கொஞ்சமாவது எய்ட்ஸ்க்கு எதிராக வலு சேர்ப்போம். நம் ,நம் உறவினர், நண்பர் களுடைய பதின்ம
வயதில் உள்ள குழந்தைகளிடம் இது பற்றி பேசுவோம். (எப்படி பேசுவது என்று பெற்றோருக்கு பாலியல் கல்வி வலைப்பூ பார்த்து தெரிந்து கொள்ளவும்). இதை நாம்
ஒரு கடமையாக கருதாமல் நம் சந்ததியருக்கு வாழ்வதற்கு தர வேண்டிய உரிமையாக கருதுவோம்.
மத்திய, கீழ் மத்திய தர குடும்பங்கள் குறிப்பாக குழந்தைகள் அப்பாவி பெண்கள் தான் அதிகமாக பாதிக்கபடுகின்றன. காரணம் யாருன்னு பார்த்தா எல்லாம் நாமதான்(
ஆண்கள் தான்). எல்லாரையும் சொல்லலை. மனைவி, அவளின் காதல், குழந்தைகளை எல்லாம் மறக்கவேண்டியது அப்புறம் மனைவிக்கும் அதை கொடுக்க வேண்டியது. இதில் கல்லூரி மாணவர்கள் கூட இப்பொழுது மிகமிகமிக அதீத ஆர்வம் காட்டுகின்றனர். காலம் உள்ளது நமக்கு ஒருத்தி வருவாள் என்ற எண்ணம் இல்லாமல் விளையாட வேண்டியது. கல்லூரி மாணவர்கள் இப்போ எல்லாம் எங்க சுற்றுலா போறாங்கன்னு பாருங்க. கோவா தான் இலக்கு கேட்டால் இண்டஸ்டிரியல் டுர். பெண்களே நீங்களும் திருமணத்திற்கு முன் பையனின் இரத்த பரிசோதனை அறிக்கை கேளுங்கள்,முடிந்தால் கூட போய் நீங்களும் ஒரு இரத்த பரிசோதனை செய்து பையன் கையில் கொடுங்கள்.
கொஞ்சம் எல்லாரும் இதை இந்த ஓழுங்கீனமான விளையாட்டை நிறுத்துவோம்.
வியாழன், 30 நவம்பர், 2006
புதன், 29 நவம்பர், 2006
கங்குலி திரும்புவாரா
"I can travel miles and miles to see this gentleman's off drive" இது டோனி கிரேஹ் கங்குலி பற்றி கூறியது. "I am seeing a wonderfull batsman as richards" இது பேரி ரிச்சர்ட், கங்குலி பற்றி கூறியது.
மிகவும் ஆக்ரோஷகமாக விளையாட கூடிய அரிய வீரர். ஆன் டிரைவ் அடிக்கிறதுல அண்ணனை விட்டா
இன்னைக்கு வரைக்கும் வேற ஆள் கிடையாது. ஸிக்சர் இவர் அடிக்கிறத பார்க்கிறதுக்கு அவ்வளவு அழகா இருக்கும்.
கங்குலி கொஞ்ச நாட்களாக அவருடைய முயற்சிகள் சரியாக அமையவில்லை. யாருக்குதான் முயற்சிகள் சரியாக
அமைந்துள்ளன எல்லா பொழுதும். சச்சின் கூட சில சமயங்களில் சரியாக ஆடுவது இல்லை. கங்குலி ன்னு இல்லைங்க. லாரா, ஜெயசூரியா,.......... உள்பட எல்லாருக்கும் சி(ப)ல சமயங்களில் முயற்சிகள் சரியாக அமையவில்லை. ஆனால் அவர்களுக்கு கிடைதத உற்சாகமும் ஊக்கமும் கங்குலிக்கு கிடைக்கவில்லை என்பது எனது கருத்து.
இந்திய அணிக்கு புத்துயிர் அளித்தவர் கங்குலி என்பதில் மாற்று கறுத்து இருக்காது என்று நம்புகிறேன். ஆஸ்த்ரேலிய அணியை அவர் எதிர்கொன்ட பாங்கு மறக்க முடியுமா என்ன?. அணி சோர்ந்து போகும் போது எல்லாம் அணியை துவளாமல் வழி நடத்திய வெற்றிகரமான அணித்தலைவர்.அவருக்கும் சச்சினுக்கும் ஆயிரம் கறுத்து வேறுபாடுகள் இருந்த போதும் அணி பாதிக்காமல் பார்த்துகொன்டார்.
ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் அரசியல் விளையாட்டில் ஒரு விளையாட்டு வீரர் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் என்றுதான் தோன்றுகிறது.
எனினும் கங்குலி மீண்டும் அணிக்கு வருவார் போல தெரிகிறது. அவர் நன்றாக விளையாட வேண்டும் என்று நினைப்போம். இல்லாவிட்டால்லும் அவருக்கு ஒரு நல்ல பிரிவு ஆட்டம் கொடுப்போம்.
மிகவும் ஆக்ரோஷகமாக விளையாட கூடிய அரிய வீரர். ஆன் டிரைவ் அடிக்கிறதுல அண்ணனை விட்டா
இன்னைக்கு வரைக்கும் வேற ஆள் கிடையாது. ஸிக்சர் இவர் அடிக்கிறத பார்க்கிறதுக்கு அவ்வளவு அழகா இருக்கும்.
கங்குலி கொஞ்ச நாட்களாக அவருடைய முயற்சிகள் சரியாக அமையவில்லை. யாருக்குதான் முயற்சிகள் சரியாக
அமைந்துள்ளன எல்லா பொழுதும். சச்சின் கூட சில சமயங்களில் சரியாக ஆடுவது இல்லை. கங்குலி ன்னு இல்லைங்க. லாரா, ஜெயசூரியா,.......... உள்பட எல்லாருக்கும் சி(ப)ல சமயங்களில் முயற்சிகள் சரியாக அமையவில்லை. ஆனால் அவர்களுக்கு கிடைதத உற்சாகமும் ஊக்கமும் கங்குலிக்கு கிடைக்கவில்லை என்பது எனது கருத்து.
இந்திய அணிக்கு புத்துயிர் அளித்தவர் கங்குலி என்பதில் மாற்று கறுத்து இருக்காது என்று நம்புகிறேன். ஆஸ்த்ரேலிய அணியை அவர் எதிர்கொன்ட பாங்கு மறக்க முடியுமா என்ன?. அணி சோர்ந்து போகும் போது எல்லாம் அணியை துவளாமல் வழி நடத்திய வெற்றிகரமான அணித்தலைவர்.அவருக்கும் சச்சினுக்கும் ஆயிரம் கறுத்து வேறுபாடுகள் இருந்த போதும் அணி பாதிக்காமல் பார்த்துகொன்டார்.
ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் அரசியல் விளையாட்டில் ஒரு விளையாட்டு வீரர் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் என்றுதான் தோன்றுகிறது.
எனினும் கங்குலி மீண்டும் அணிக்கு வருவார் போல தெரிகிறது. அவர் நன்றாக விளையாட வேண்டும் என்று நினைப்போம். இல்லாவிட்டால்லும் அவருக்கு ஒரு நல்ல பிரிவு ஆட்டம் கொடுப்போம்.
செவ்வாய், 28 நவம்பர், 2006
இவர்தான் வில்லனா.
இரண்டு நாளைக்கு முன்னாடி வல்லவன் படம் பார்த்தேன்.படம் பார்த்து முடிச்ச உடனே எனக்கு சில ஞாபகங்கள். மூன்று நான்கு வருடங்களுக்கு முன் சிம்பு அவர்கள் பள்ளியில் படித்த போது பிரபலமான ஒருவரின் மகளை காதலித்ததாக சில பல கிசுகிசுக்கள் படித்ததாக நினைவு. அந்த பெண்ணும் அதே பள்ளியில் படித்தார்.அப்புறம் அவர்க:ளுக்குள் மன முறிதல் ஏற்பட்டு அந்த காதல் முறிந்து விட்டதாகவும், அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்று படித்தேன்.
வல்லவன் படம் பார்க்கும் போது ரீமாசென் கதாபாத்திரம் அந்த பிரபலமானவரின் மகளை நினைவுக்கு கொண்டு வந்தது.
இப்பொழுது சிம்பு நயன்தாரா வை காதலித்து கிசுகிசுக்க வைத்து சண்டை போட்டு எல்லாம் முடிந்த பிறகு பத்திரைக்கைகளை புரட்டும் போது அந்த பிரபலத்தின் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க சென்ற போதுதான் சிம்பு, நயன்தாரா இடையே விரிசல் அதிகமாக ஆனதாகவும் அப்புறம் அந்த பிரபலம் நயன்தாராவுக்கு தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினாராம்.
பிரபலம்- superstarஅவரின் பெண். ஐஸ்வர்யா.
இதை பற்றி நண்பர்களிட்ம் அரட்டை அடிக்கும் போது ஒருத்தர் கொடுத்த விளக்கம்.
"கூட்டி கழிச்சு, superstar கணக்கை நேர் பண்ணி இருக்கார்"
அப்படீங்களா............................................
வல்லவன் படம் பார்க்கும் போது ரீமாசென் கதாபாத்திரம் அந்த பிரபலமானவரின் மகளை நினைவுக்கு கொண்டு வந்தது.
இப்பொழுது சிம்பு நயன்தாரா வை காதலித்து கிசுகிசுக்க வைத்து சண்டை போட்டு எல்லாம் முடிந்த பிறகு பத்திரைக்கைகளை புரட்டும் போது அந்த பிரபலத்தின் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க சென்ற போதுதான் சிம்பு, நயன்தாரா இடையே விரிசல் அதிகமாக ஆனதாகவும் அப்புறம் அந்த பிரபலம் நயன்தாராவுக்கு தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினாராம்.
பிரபலம்- superstarஅவரின் பெண். ஐஸ்வர்யா.
இதை பற்றி நண்பர்களிட்ம் அரட்டை அடிக்கும் போது ஒருத்தர் கொடுத்த விளக்கம்.
"கூட்டி கழிச்சு, superstar கணக்கை நேர் பண்ணி இருக்கார்"
அப்படீங்களா............................................
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)